இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தான் தேர்தலில் போட்டியிட முடியாததன் காரணமாக நான் போட்டியிட வேண்டுமென விரும்புகின்றார் எனவும் தெரிவி;த்துள்ளார்.
இந்தியாவின் த வீக்கின் லக்ஸ்மி சுப்பிரமணியத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் கோத்தபாய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குள்ள தலைவர் மகிந்த ராஜபக்ச எனினும் அரசமைப்பின் 19 வது திருத்தம் காரணமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது இதன் காரணமாக அவர் நான் போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்கின்றார் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை என்னால் பல விடயங்களை செய்ய முடியும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள அவர் நான் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டுவிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நான் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராகயிருந்திருந்தால் தீவிரவாதமயப்படுத்தலை கண்காணித்து எங்களிடமிருந்த பொறிமுறைகளை பயன்படுத்தி அதனை கட்டுப்படுத்தியிருப்பேன் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் இதனை கண்காணித்திருந்தால் அவர்களால் தீவிரவாதிகளை கைதுசெய்து இந்த வலையமைப்பை முறியடித்திருக்க முடியும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் எனக்கு அதிர்ச்சியையும் கவலையையும் அளித்துள்ளது எனக்குறிப்பிட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த முக்கிய நபர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் 2009ற்கு பின்னர் இலங்கை மீண்டும் இவ்வாறான வன்முறைகளை எதிர்கொள்ளும் என ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM