பெங்களுர் அணியின் தலைவர் விராட்கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடுவர் நைஜல் லோங் அதன் பின்னர் நடுவர்களிற்கான அறையின் காலால் உதைத்து சேதப்படுத்தியமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது
நான்காம் திகதி பெங்களுர் ஹைதராபாத் அணிகளிற்கு இடையிலான போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஹைதராபாத் அணி துடுப்பெடுத்தாடியவேளை இருபதாவது ஓவரை உமேஸ் யாதவ் வீசினார் . அவ்வேளை ஐந்தாவது பந்தை நோபோல் என நடுவர் நைஜல்லோங் அறிவித்தார். எனினும் உமேஸ் யாதவின் கால் கீறிஸிற்கு உள்ளே இருப்பதை ரீ பிளேக்கள் காண்பித்தன.
இதனை தொடர்ந்து உமேஸ் யாதவ் நடுவரிடம் சென்று தனது அதிருப்தியை வெளியிட்டவேளை அவரை எச்சரித்த நடுவர் தொடர்ந்து பந்துவீசுமாறு கேட்டுக்கொண்டார்.
விராட்கோலியும் தனது அதிருப்தியை வெளியிட்டார்.
வீரர்கள் அதிருப்தி வெளியிடுவது குறித்து ஐசிசி நடுவரான லோங் சீற்றமடைந்தவராக காணப்பட்டார்.
இதேவேளை ஹைதராபாத் அணி துடுப்பெடுத்தாடிய பின்னர் பவிலியனிற்கு திரும்பிய நைஜல் லோங் நடுவர்கள் அறையின் கதவை காலால் உதைத்தார் அதன் போது கதவு சேதமடைந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்னர் தனது தவறை ஏற்றுக்கொண்ட நடுவர் கதவை சேதப்படுத்தியதற்காக குறிப்பிட்ட தொகையை வழங்கியுள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM