நீர்கொழும்பில் இடம்பெற்றது என்ன ? பள்ளிவாசல்கள், வீடுகள் மீது தாக்குதல்கள் ! 

Published By: Priyatharshan

07 May, 2019 | 10:59 AM
image

நீர்­கொ­ழும்பில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வத்தில் பள்­ளி­வாசல் உட்­பட 10 இற்கும் மேற்­பட்ட வீடுகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ள­துடன் மோட்டார் சைக்­கிள்கள் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­துடன் முச்­சக்­க­ர­வண்­டி­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

வீடு­க­ளுக்குள் புகுந்த குழு­வினர் வீட்டில் உள்ள பொருட்­களை அடித்து சேதப்­ப­டுத்­தி­ய­துடன் சில வீடு­களில் நகைகள் பணம் மற்றும் பொருட்­களை கொள்­ளை­யிட்டு சென்­றுள்­ள­தா­கவும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் முறை­யி­டு­கின்­றனர்.

நீர்­கொ­ழும்பு  கொச்­சிக்­கடை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட போரு­தொட்ட, பல­கத்­துறை பிர­தே­சத்தில் முச்­சக்­கர  வண்டி சங்­கங்­களைச் சேர்ந்த  இரண்டு குழுக்­க­ளி­டையே நேற்­று­முன்­தினம்  ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற  கைக­லப்பை அடுத்து அப்­ப­கு­தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரி­யூட்­டப்­பட்­ட­துடன் சில முச்­சக்­கர வண்­டி­களும் சேத­மாக்­கப்­பட்­டன. 

இந்த நிலையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் மற்றும் இரா­ணு­வத்­தினர் சம்­பவ இடத்­திற்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­துடன் நிலைமை ஓர­ள­வுக்கு கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­தி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து நீர்­கொ­ழும்பு பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட பகு­தியில் ஊர­டங்­குச்­சட்டம் அமுல்ப்­ப­டுத்­தப்­பட்­டது. ஊர­டங்­குச்­சட்டம் அமுல்ப்­ப­டுத்­தப்­பட்­ட­போதும் குழு­வொன்று முஸ்­லிம்­களின் வீடுகள் மற்றும் வாக­னங்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளது. 

வாள்கள் பொல்­லு­க­ளுடன் வருகை தந்த இக்­கு­ழு­வினர் தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளனர். ஊர­டங்­குச்­சட்டம் அமுல்ப்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யினால் பிர­தான வீதிக்கு செல்­லாமல் உள்­வீ­தி­களால் பிர­வே­சித்த குழு­வி­னரே இத்­த­கைய தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.

 இந்த அசம்­பா­வி­தங்­க­ளின்­போது வீடுகள் பல தாக்­கப்­பட்­டன. வீடு­களில் உள்ள பொருட்கள் சேத­மாக்­க­பட்­ட­துடன் சில வீடு­களில் நகைகள், பணம் மற்றும் பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.  இந்த சம்­ப­வத்­தின்­போது வாக­னங்கள் பல தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­துடன் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் சிலர் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

 ஊர­டங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வேளையில்  இனந்­தெ­ரி­யாத குழுக்கள் தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும் சம்­ப­வத்தை நேரில் கண்­ட­வர்­களும் தெரி­விக்­கின்­றனர். 

பள்­ளி­வா­சல்­மீது தாக்­குதல்

பெரி­ய­முல்லை லாசரஸ் வீதி, பெரி­ய­முல்லை செல்­ல­கந்த வீதி, தளு­பத்தை, கல்­கட்­டுவை வீதியில் சமகி மாவத்­தையில் அமைந்­துள்ள வீடுகள் பல­வற்­றின்­மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் முச்­சக்­கர வண்­டிகள், மோட்டார் சைக்­கிள்கள் ஆகி­யன தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன. இப்­ப­கு­தியில் 10 இற்கும் மேற்­பட்ட வீடுகள் தாக்­கு­த­லுக்­குள்­ளா­கி­யுள்­ள­துடன் பொருட்­களும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன. பெரி­ய­முல்லை லாசரஸ் வீதியில் தெனி­ய­வத்த பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வா­சலின் யன்னல் கண்­ணா­டிகள்  உடைக்­கப்­பட்­டுள்­ளன.

 சம்­ப­வத்தை அடுத்து முஸ்லிம் மக்கள் பெரும் அச்­சத்­துடன் இருந்­தனர். சிலர்  தமது உற­வி­னர்­க­ளு­டைய வீடு­க­ளுக்கு பாது­காப்பு தேடிச் சென்­றனர்.

சம்­பவம் தொடர்­பாக முப்­ப­டை­யினர் மற்றும் பொலி­ஸா­ருக்கு தகவல் வழங்­கப்­பட்­டதை அடுத்து பிர­தே­சத்தில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டது. ஆயினும் ஊர­டங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட வேளை­யிலும் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கர்­தினால் நேரில் விஜயம்

இதே­வேளை, கொழும்பு பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்சித், அகில இலங்கை  ஜம்­மி­யத்துல் உல­மாவின் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் பல­கத்­துறை ஜும்மா பள்­ளி­வாசல்,  தெனி­ய­வத்த பள்­ளி­வாசல், பெரி­ய­முல்லை பெரிய பள்­ளி­வாசல் ஆகி­ய­வற்கு  விஜயம் செய்­தனர். பெரி­ய­முல்லை பெரிய பள்­ளி­வா­சலில் இரு தலை­வர்­களும் இரு தரப்­பி­னரும் ஒற்­று­மை­யாக இருக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தினர்.

பேராயர் மல்கம் ரஞ்சித் அங்கு உரை­யாற்­றும்­போது , 

சிறிய குழுவைக் கொண்ட அடிப்­ப­டை­வா­திகள்  அண்­மையில் தேவா­ல­யங்­க­ளிலும் ஹோட்­டல்­க­ளிலும் மேற்­கொண்ட தாக்­கு­தல்­க­ளுக்கு முஸ்­லிம்கள் பொறுப்­பல்ல. எனவே,  முஸ்­லிம்­களை தாக்க வேண்டாம் என்று என்று கேட்­டுக்­கொள்­கிறேன். 

இரு சம­யத்­த­வர்­களும் சகோ­த­ரர்­க­ளாவோம். இரு இனத்­தி­னரும் நூறாண்­டு­க­ளுக்கு மேலாக சகோ­த­ரர்­க­ளாக வாழ்ந்தோம். இனியும் வாழ­வேண்டும். எனவே, கிறிஸ்­த­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்கு தொந்­த­ரவு செய்ய வேண்டாம். இங்­குள்ள சிறிய பள்­ளி­வாசல் ஒன்றின் கண்­ணா­டிகள் உடைக்­கப்­பட்­டி­ருந்­த­தையும் சம­யப்பாட­சா­லையின் கட்டடம் தாக்கப்பட்டதையும் அவதானித்தேன். 

இது கத்தோலிக்கர்களான எங்களுக்கு பொருத்தமானது அல்ல. இவ்வாறு நாங்கள் செய்யக்கூடாது. அப்படி நடந்தால் நாங்கள் எமது சமயத்திற்கு எதிராக நடந்துகொண்டதாக அமையும். நாங்கள் முஸ்லிம்களுடன் சகோதரர்களாக பழக வேண்டும். நடந்த சம்பவத்திற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

 இதன்போது மேல்மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் , நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அத்துகோரல, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10