யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் சென்ற குடும்பப் பெண்ணிடம் 13 தங்கப் பவுண் தாலிக்கொடி அறுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் தாலிக்கொடி அறுக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு கொள்ளையர்களால் தாலிக்கொடி இழுத்து அறுக்கப்பட்டதால் கழுத்துப்பகுதியில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் – நாவலர் வீதியைச் சேர்ந்த சந்திரன் நிரஞ்சனா (வயது -40) என்பவரே கழுத்துப் பகுதியில் காயத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
யாழ்ப்பாணம் நல்லூர் மகா விஷ்ணு ஆலய கொடியேற்றத் திருவிழாவுக்குச் சென்று கச்சேரி – நல்லூர் வீதியால் இன்று பிற்பகல் வீடுதிரும்பிய அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் இடைமறித்து தாலிக்கொடியை அறுத்தெடுத்து தாலியுடன் கொண்டு சென்றுள்ளனர்
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM