சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரரான பிராவோ, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரரான பிராவோ. ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நீண்ட காலமாக அவர் சென்னை அணியில் விளையாடி வருவதால் இங்குள்ள கலாச்சாரம், உணவு வகைகள் அவருக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் பிராவோ ஒரு இசைப்பிரியர். நடனம் ஆடுவதிலும் வல்லவர். “சித்திரம் பேசுதடி 2” என்ற தமிழ் படத்துக்கு அவர் பாடியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க விரும்புவதாக பிராவோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்தை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் நான் அவரது ஒரு படத்தை கூட பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பேன். ரஜினிகாந்தை சந்திக்க நான் விரும்புகிறேன். என்றாவது ஒரு நாள் சந்திக்கும் ஆர்வத்துடன் இருக்கிறேன்.
நான் ஏற்கனவே ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற தமிழ் படத்தில் பாடி இருக்கிறேன். எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பாகும். அந்த பாடல் இன்னும் எனக்குள் இருக்கிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது இரு கைகளாலும் பற்றிக் கொள்வேன். தமிழ் படத்தில் நான் நடிப்பதற்கான பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் ஆகியோர், தமிழில் ‘டுவிட்’ செய்வதுபோல் நானும் ஒரு நாள் செய்வேன். டோனியின் அறிவுரை எனக்கு எப்போதும் பயன் உள்ளதாக இருக்கும்.
இவ்வாறு பிராவோ தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM