யாழ்ப்பாணம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் இரண்டு வாள்களுடன் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சரின் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபரிடம் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
அத்துடன் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞர் ஒருவரின் கைவிரல் துண்டானதுடன், மற்றறொரு இளைஞர் காயமடைந்திருந்தார். அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சுன்னாகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன், வாள் ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM