ராகுலின் அதிரடியான துடுப்பாட்டம் காரணமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 55 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 170 ஓட்டங்களை குவித்தது.
171 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணிக்கு கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் நல்லதொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
அதனால் பஞ்சாப் அணி நான்கு ஓவர்களில் 57 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், அதிரடிகாட்டிய ராகுல் 4.1 ஆவது பந்தில் ஆறு ஓட்டத்தை விளாசித் தள்ளி மொத்தமாக 19 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இதேவேளை இந்த ஓவரில் ராகுல் தொடர்ந்தும் அதிரடிகட்டா மொத்தமாக அந்த ஓவரலி மாத்திரம் 24 ஓட்டங்கள் பெறப்பட்டதுடன் (4 4 4 6 0 6), 10 ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 106 ஓட்டங்களை குவித்தது.
ராகுல் 70 ஓட்டத்துடனும், கெய்ல் 27 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். இந் நிலையில் 11 ஆவது ஓவருக்காக ஹர்பஜன் சிங் பந்துப் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் ராகுல் 78 ஓட்டத்துடனும், 3 ஆவது பந்தில் கிறிஸ் கெய்ல் 28 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதுமாத்திரமன்றி அடுத்து களமிறங்கிய மயன்க் அகர்வாலும் 12.2 ஆவது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் பந்து வீச்சில் 7 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 118 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
4 ஆவது விக்கெட்டுக்காக நிக்கோலஸ் பூரண் மற்றும் மண்டீப் சிங் ஜோடி சேர்ந்தாட பஞ்சாப் அணி 15 ஓவரில் 151 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்தும் நிக்கோலஷ் பூரண் மைதானத்தில் அதிரடி காட பஞ்சாப் அணி ஓவரில் 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து சென்னை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்ததுடன் அதிரடியான துடுப்பெட்டாத்தை வெளிப்படுத்திய நிக்கோலஷ் பூரண் 16.2 ஆவது ஓவரில் 36 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து சாம் கர்ரன் மற்றும் மண்டீப் சிங் ஜோடி சேர்ந்தாட பஞ்சாப் அணி 18 ஓவரில் சென்னை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது. மண்டீப் சிங் 11 ஓட்டத்துடனும், சாம் கர்ரன் 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.
நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM