மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் நேற்றயை தினம் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள பற்றைக்குள் மர்மமான இரண்டு பொதிகளை அவதானித்த நபர் ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் விரைந்து சென்று குறித்த இரு பொதிகளை பார்வையிட்டதோடு, சோதனையிட்டனர்.
இதன்போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெட்டனேற்றர் குச்சுகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டனர். மீட்கப்பட்ட சி-4 வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்றிரவு குறித்த வெடி பொருட்கள் படையினரினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM