வவுனியா மடுகந்த பகுதியில் குளத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ரி56 ரக துப்பாக்கிக்குப்பயன்படுத்தும் மகசீன் மற்றும் தோட்டாக்கள் என்பனவற்றை இன்று காலை மடுகந்தை விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மடுகந்தை குளத்திற்கு அருகில் பட்டம் விடுவதற்காகச் சென்ற சிறுவன் ஒருவன் இப்பொருட்களை அங்கு அவதானித்துள்ளார்.
இதையடுத்து விமானப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மடுகந்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பாதுகாப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.
பொலிசார் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற விஷேட அதிரடிப்படையினர் அங்கு காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கிக்குப்பயன்படுத்தப்படும் மகசீன் மற்றும் அதற்குரிய தோட்டாக்கள் என்பனவற்றை மீட்டுள்ளதுடன் அப்பகுதியில் மேலும் வெடி பொருட்களைத் தேடி தேடுதல் நடவடிக்கை ஒன்றையும் மேற்கொண்டனர். எனினும் சந்தேகத்திற்கிடமான வேறு எவ்விதமான பொருட்களும் அங்கு காணப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM