(எம்.எப்.எம்.பஸீர்)
வெடி பொருட்கள் பொருத்தப்பட்ட 20 வாகனங்கள் தெற்கிலிருந்து வடக்குக்கு வந்துள்ளதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளதால் வடக்கில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி வட பகுதிக்குள் நுழையும், அங்கிருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களையும் நேற்று சோதனைக்குட்படுத்த ஆரம்பித்ததாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இவ்வாறு சோதனைகளின் போது தேடப்படும் வாகனங்களில் பெரும்பாலானவை உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் தேவாலயங்கள் நட்சத்திர ஹோட்டல்களில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் குண்டுதாரிகளின் பெயரிலும் அவர்களைச் சார்ந்தோரின் பெயரிலும்
பதிவு செய்யப்பட்டவை என உளவுத்தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உயர் இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வாறு தேடப்படும் வாகனங்களில் 12 மோட்டார் சைக்கிள்கள், இரு வேன்கள், கெப் வண்டி ஒன்று, முச்சக்கர வண்டியொன்று, டிமோ பட்டா லொறியொன்று, இரு கார்கள் அடங்குவதாக குறித்த இராணுவ அதிகாரி சுட்டிக்காட்டினார். உளவுத்துறை தகவல்களுக்கு அமைய அந்த வாகனங்களை கைப்பற்ற வடக்கில் விஷேட 4 சோதனை சாவடிகளை நிறுவியதாகவும் அந்த இராணுவ அதிகாரி சுட்டிக்காட்டினார்.
வவுனியா நகரம், ஹொரவ்பொத்தானை வீதி, தாண்டிக்குளம், இரட்டை பெரிய குளம் ஆகிய பகுதிகளில் இந்த நான்கு பிரதான சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த 20 வாகனங்களின் இலக்கங்களையும் பொது மக்கள் பார்வை இடுவதற்காக சில வீதிகளில் பாதுகாப்புத் தரப்பினர் காட்சிப் படுத்தியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
பாதுகாப்புத் தரப்பு தேடும் வாகனங்களின் விபரம் வருமறு:
BCY 2183 ரிவிஎஸ் மோட்டார் வண்டி
VP 7783 பஜாஜ் பல்சர் மோட்டார் வண்டி
PH 3779 கரவன் வான்
BHA 5891 மோட்டார் வண்டி
PJ 4080 டிமோ சிறியரக லொறி
AAC 9844 முச்சக்கரவண்டி
BCA 4843 யமகா மோட்டார் வண்டி
BAE 4197 ஜே எ சி கெப் வண்டி
US 3740 மகேந்திரா கெப் வண்டி
BDM 0596 ஹொண்டா ஸ்கூட்டி
15- 0316 கார்
CBF 1618 கார்
BCK 8048 மோட்டார் சைக்கிள்
BHF 5891 ஸ்கூட்டி
MR 1605 மோட்டார் வண்டி
BCY 2183 மோட்டார் சைக்கிள்
BAO 5891 மோட்டார் சைக்கிள்
VL 9223 மோட்டார் சைக்கிள்
PH 3778 ஹை ஜெட் வான்
WP VC 4843 FZ16 யமஹா மோட்டார் சைக்கிள்
கிங்ஸ்பரி ஹோட்டல் தற்கொலைதாரியின் மோட்டார் சைக்கிள்
இதனிடையே கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடாத்திய குண்டுதாரியான மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக்குக்கு சொந்தமான எப்.இஸட் ரக மோட்டார் சைக்கிளொன்று நேற்று பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது. குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கிடைத்த தனிப்பட்ட தகவலொன்றுக்கு அமைவாக குளியாப்பிட்டி பொலிசார் இந்த மோட்டார் சைக்கிளைக் கைப்பற்றியுள்ளனர். டப்ளியூ.பி.வி.சி. 4843 எனும் இலக்கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த தற்கொலை குண்டுதாரியின் பெயரில் உள்ள இந்த மோட்டார் சைக்கிள், குளியாபிட்டி - எம்பவ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஒரு இலட்சத்து 83 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் போது குண்டுதாரி, அதனை மீள பதிவு செய்வதற்கான திறந்த ஆவணங்களையும் வழங்கியுள்ளதுடன் இதன்போது அவரின் தேசிய அடையாள அட்டை பிரதி ஒன்றினையும் பெற்றுக்கொடுத்துள்ளார். இவையனைத்தையும் குளியாட்டி பொலிசார் தமது பொறுப்பில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் வட்ஸ் அப் சமூக வலைத்தளங்களில் தேடப்படும் வண்டி இலக்கங்கள் என பரவி வந்த நிலையிலேயே, அச்சத்தில் அதனை கொள்வனவு செய்த நபர் குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ரொஷான் வெதமுல்லவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனையடுத்தே அதனை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மோட்டார் சைக்கிளை கொள்வனவு செய்தவருக்கும், குண்டுதாரிக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் இருந்தனவா எனவும் பொலிஸார் விசாரணைகளில் அவதானம் செலுத்தியுள்ளனர்.
கல்முனையில் சிக்கிய இரத்தக் கரை படிந்த கார்
கல்முனை பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேநபரிடமிருந்து இரத்தக்கறை படிந்த கார் மற்றும் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய நிழற்படங்களைக் கொண்ட கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்பயைினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கல்முனை பகுதியை சேர்ந்த பொறியிலாளர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனைகளில் சிக்கியவை
இதேநேரம், கலஹா மற்றும் மாத்தறை – மாலிம்பட பகுதிகளில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. அத்தோடு, பண்டாரகம அலுத்கம பகுதியில் நேற்று முன் தினம் மாலை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தவிர, கல்கிஸ்ஸ விஹார மாவத்தையில் தாக்குதல்களுடன் தொடர்புடைய காணொளிகள், நிழற்படங்கள் மற்றும் குரல் பதிவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்,
தர்கா நகர் நகரில் வெலிபிட்டிய பகுதியை அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டியில் 11 பேர் கைது
இதனிடையே கண்டி – வத்துகாமம், மடவல தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மடவல தோட்டத்தில் உள்ள வீடொன்றை சோதனைக்குட்படுத்திய போது, அங்கிருந்து 12 சிறிய கத்திகளும், துப்பாக்கியொன்றும், சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 பெரிய கத்திகளும், கெமரா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
அளுத்கம சுற்றிவளைப்பு
இதேவேளை, அளுத்கம தர்கா நகரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பின் போது பதிவு செய்யப்படாத இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.
ஸ்னைப்பர் துப்பாக்கி பாகத்தின் மீட்பு
இராணுவமும் உளவுத் துறையும் இணைந்து நேற்று குருணாகல் நகரை அண்மித்த பகுதிகளில் முன்னெடுத்த விஷேட சோதனைகளின் போது, வீடொன்றிலிருந்து ஸ்னைப்பர் ஆயுதத்துக்கு பொருத்தபப்டும் தூரத்தில் உள்ளவற்றை பெருப்பித்துக் காட்டும் உபகரணமும் ஆயுதத்தின் ஏனைய பகுதிகளும் மீட்கப்பட்டதாக பொலிசார் கூறினர். குருணாகல் - நீர் கொழும்பு பிரதான வீதியில் மலியதேவ ஆண்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்தே இவைக் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனைவிட அந்த வீட்டிலிருந்து வாள், இரண்டு கத்திகள், உரைகள் அடங்கிய 16 இறுவெட்டுக்கள், சந்தேகத்துக்கு இடமான ஆவணங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படும் நபர் ஒருவரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிசார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
சஹ்ரானின் சகோதரன் ரில்வானின் மனைவி வீட்டில் சிக்கிய தற்கொலை அங்கி
இதனிடையே நேற்று பாதுகாப்பு தரப்பினர் காத்தாண்குடி 5 பகுதியில் அமைந்துள்ள, வீடொன்றினை விஷேட சோதனைக்கு உட்படுத்தினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் தம்பியான சாய்ந்தமருது தற்கொலை குன்டுதாரிகளில் ஒருவரான மொஹம்மட் ரில்வானின் மனைவி வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அவ்வீட்டிலிருந்து தற்கொலை குண்டுதரிகள் அணியும் ஜக்கட் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. எனினும் அதில் எந்த வெடிபொருட்களும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என பொலிஸார் கூறினர். இதனைவிட 4 தொலைபேசிகள், வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் பல தேசிய அடையாள அட்டைகள் சிக்கியுள்ள நிலையில் வீட்டில் இருந்த ரில்வாவின் மாமாவும் மாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனைகள் தொடரும்
இதனிடையே பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு தரப்பினரல முன்னெடுக்கபப்டும் சோதனைகளும் கைதுகளும் தொடரும் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
அவசர கால சட்ட விதிமுறைகளின் கீழ் இராணுவத்தினருக்கு சோதிக்கவும், கைதுகளை முன்னெடுக்கவும் அதிகாரம் உள்ளது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வதந்திகளை பரப்புவோரை கைது செய்ய விஷேட திட்டம்
இதனிடையெ நாட்டில் நிலவும் சூழலை மையப்படுத்தி போலி புகைப்படங்கள், வீடியோக்கள் ஊடாகவோ கருத்துக்கள் ஊடாகவோ வதந்திகளை பரப்பி இன மதங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார். இதற்காக விஷேட செயற்றிட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM