மது போதையில் அட்டகாசம் செய்த 5 இளைஞர்கள் கைது

Published By: Digital Desk 4

02 May, 2019 | 05:28 PM
image

மது போதையில் அட்டகாசம் புரிந்ததுடன் , பொலிசாரின் வாகன கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய ஐந்து இளைஞர்களை சாவகச்சேரி பொலிசார் கைது செய்துள்ளனர். 

கைதடி சந்தியில் நேற்று புதன்கிழமை மாலை மதுபோதையில் நின்ற இளைஞர் குழு ஒன்று அட்டகாசங்களில் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பில் அங்கிருந்தவர்கள் சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவித்தனர். 

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்த போது , பொலிசாரை கண்டு இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். இருந்த போதிலும் ஐந்து இளைஞர்களை பொலிசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட ஐந்து இளைஞர்களும் வாகனத்திற்குள் இருந்து பொலிசாருடன் வாக்குவாதப்பட்டதுடன் பொலிசாரின் வாகன கண்ணாடிகளையும் கைகளால் குத்தி உடைத்துள்ளார்கள். 

இதனால் பொலிசார் அவர்களை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அழைத்து சென்று காயங்களுக்கு சிகிச்சை அளித்த பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11