இந்தோனேசியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற அதிபர் ஜோக்கோ விடோடோ தீர்மானித்துள்ளார்.
இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 26 கோடி. தலைநகர் ஜகர்தாவில் 1 கோடி பேரும், அருகில் உள்ள நகரங்களில் 3 கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர். நகரங்களை நோக்கி மக்கள் குவிவதால் நெருக்கடி அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய நகரங்களை உருவாக்க அதிபர் ஜோக்கோ விடோடோ தீர்மானித்துள்ளார்.
இதன் முதல்கட்டமாக அந்நாட்டின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான தீர்மானம் பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைநகரம் அமைப்பதற்காக பரிசீலிக்கப்படும் இடங்களின் பட்டியலில் போர்னியோ தீவில் உள்ள காளிமாண்டன் மாகாணத் தலைநகரான பாலங்கராயா முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM