நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இரானுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இலங்கை முழூவதும் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் வவுனியா கோவில்குளம் பகுதியில் இன்று காலை இரானுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்திருந்தனர்.
அப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் சென்று அனைத்து இடங்களையும் சோதனைக்குட்படுத்தியதுடன் அடையாள அட்டை பதிவினையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் சுற்றிவளைப்பின் போது கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இராணுவ சீருடை ஒன்றும் உயர் மின்னழுத்த வயர் றோல்கள் நான்கு மற்றும் ,கையுறை , சப்பாத்து , டிஜிட்டல் மீற்றர் போன்றவை இருந்தமையிட்டு அவர் கைதுசெய்யபட்டுள்ளதுடன் அவர் மத்திய கிழக்கு நாடொன்றில் இருந்து அண்மையில் இலங்கை வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் அண்மைய நாட்களாக பல பகுதிகள் சுற்றிவளைக்கபட்டு சோதனைகள் மேற்கொள்ளபடும் செயற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM