வடக்கு பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம் – பாதுகாப்பு உறுதி எனவும் ஆளுநர் தெரிவிப்பு

Published By: Digital Desk 4

01 May, 2019 | 08:47 PM
image

“வடக்கு மாகாணப் பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகமட்டக் குழுக்கள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புத் தேவை எனக் கோரினார் அதனை வழங்கத் தாயார்”

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடக்கு மாகாணத்தில் 339 தனியார் கல்வி நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றின் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 1000 பேர் படிக்கின்றனர். அவற்றில் எந்தொரு பாதுகாப்பு தன்மைகள் கூடமால் இருக்கின்றது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நகரபகுதியில் உள்ள 84  தனியார் கல்வி நிலையங்கள் உள்ளன. ஏனைய பகுதியில் 290 தனியார் கல்வி நிலையங்கள் இருக்கின்றன.

இதில் எந்தொரு கல்வி நிலையத்தின் இயக்குனரும் பதிவு செய்ய முன்வரவில்லை அவர்கள் முன்வரவேண்டும். அப்போது தான் அவ்வாறான கல்வி நிலையங்களுக்குப் பாதுகாப்பினை வழங்கமுடியும். பொலிஸார், அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் ஊடாக கல்வி நிலையத்திற்காக பாதுகாப்பினை கொடுக்கமுடியும். அதுவும் காலத்தின் தேவையாக இருக்கின்றது.

வடமாகாணத்தின் எதிர்வரும் 06 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

பாடசாலை சமூகம் இராணுவமயமற்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியதால், பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் சாரணர்களை உள்ளடக்கிய சிவில் விழிப்புக் குழுக்கள் விழிப்புடன் செயற்படும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக எந்தவொரு ஆசிரியரும் தமக்கு மேலதிக பாதுகாப்பு வேண்டும் எனக் கோரினார் அதனை கருத்தில் எடுத்து பாதுகாப்பு வழங்கத் தயாராக உள்ளோம் – என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47