(நா.தனுஜா)
வவுணதீவில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பிற்குத் தொடர்புள்ளமை உறுதியாகியிருக்கும் நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதிர்காமத் தம்பி ராசகுமாரனை உடனடியாக விடுவிக்குமாறு கோரி இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவரச கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது
.
இவ்விடயம் குறித்து இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.டி.அருண்காந்த குறிப்பிடுகையில்,
சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பாதுகாப்பு அரணில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கதிர்காமத்தம்பி ராசஜகுமாரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வங்கிகளில் கடன்பெற்று கொள்வனவு செய்யப்பட்ட இவரது மோட்டார் வாகனத்தையும் வவுணதீவு பொலிஸார் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் வவுனியாவில் தலைமறைவாக இருந்தபோது கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பின் தலைவரும், தற்கொலை குண்டுதாரியாகவும் செயற்பட்ட சஹ்ரானின் சாரதி மொஹமட் சரீப் ஆதம் லெப்பே என்ற நபரை விசாரித்தபோது வவுணதீவு பொலிசாரை படுகொலை செய்ய திட்டம் தீட்டியது, படுகொலை செய்தது அனைத்துமே நாட்டில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட தேசிய தௌஹீத் ஜமா- அத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
வவுணதீவு படுகொலைகள் தொடர்பான உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரான கதிர்காமத்தம்பி ராசஜகுமாரனை உடனடியாக விடுதலை செய்து, கடுமையான வாழ்வாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கச்செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM