ஐ.நா பயங்கரவாத ஒழிப்புக்கான சிறப்பு குழு இலங்கை வருகை

Published By: Digital Desk 4

01 May, 2019 | 12:45 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் இணக்கம் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரதிநிதிகள் குழுவொன்றினை வெகுவிரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதாக ஐ.நா பிரதி பொதுச் செயலாளர் மிகுவல் ஏஞ்சல் மொரட்டினோஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் செவ்வாய்கிழமை இடம்பெற்ற விஷேட சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஐநா பாதுகாப்பு சபையின் முன்னாள் தலைவருமான அவர், ஐநா பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதியாக நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற அல்கைதா தாக்குதலை இதன்போது நினைவுகூர்ந்த பிரதிப் பொதுச் செயலாளர், ஸ்பெயின் நாட்டைப் போன்றே இலங்கையும் நட்புறவான பல சமூகங்களைக் கொண்ட சிறந்த விருந்தோம்பல் நாடாகும். அவ்வாறான நாடுகள் தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகுதல் துரதிஷ்டவசமானவை எனவும் தெரிவித்தார்.

ஐ.நா நாகரீகங்களுக்கான கூட்டமைப்பினால் தற்போது மத வணக்கஸ்தலங்களின் பாதுகாப்பு பற்றிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதற்கான ஆலோசனைகளை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ ஹட்டேரஸ் மற்றும் பிரதிப் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த சந்தர்ப்பத்தில் ஐ.நா சபையின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பது பெரும் பலமாகும் என்றும் தெரிவித்தார்.

தற்போது எதிர்கொள்ள நேர்ந்துள்ள பயங்கரவாத சவால்களை வெற்றிகொள்வதற்கான ஆற்றல் இலங்கை பாதுகாப்பு துறையினரிடம் காணப்படுகின்றது. அதற்காக கிடைக்கப்பெறும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவி மிக முக்கியமானவை. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டிற்குள் கொண்டுவர தாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையின் இலங்கைக்கான நிரந்த பிரதிநிதி ஹெனா சிங்கர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியதுங்க உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34