வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம் இராணுவ கட்டுப்பாட்டில் 25 வருடங்களாக இருந்து பின் இராணுவத்தினரால் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மண்டபம் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்திருந்தமையினால் மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தது. இதனைக்கருத்தில் கொண்டு இராணுவத்தினர் 10 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த இரண்டு வருடங்களாக புனரமைப்பு செய்யப்பட்டு வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா வவுனியா அரசாங்க அதிபர் ஐ. எம். கனீபாவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.
குறித்த கலாசார மண்டபத்தினை 2017 ஆம் ஆண்டு இராணுவத்தினர் சமாதான சூழலை கருத்தில் கொண்டு கலாசார மண்டபத்தில் இருந்த இராணுவ முகாமை அகற்றி பிரதேச செயலாளர் கா. உதயராசாவிடம் கையளித்திருந்தனர்.
1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜா குகனேஸ்வரனின் பன்முகப்பட்டுத்தப்பட்ட நிதி மற்றும் அரசின் ஏனைய நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்ட குறித்த கலாசார மண்டபம் திறப்பு விழா காண இருந்த நிலையில் அரசியல் போட்டியினால் திறக்கப்படாது காணப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு இராணுவத்தினர் அதனை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM