ட்ரோன் மூலம் வைத்தியசாலைக்கு சிறுநீரக உறுப்பு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்டிமோர் சிட்டியில் 44 வயது பெண்மணி 8 வருடமாக டயாலிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதனால் அவருக்குச் சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சிறுநீரகம் மேற்கு பால்டிமோர் சிட்டியிலிருந்து 31.5 மைல் தூரம் வரவேண்டி இருந்தது. அதைக் கொண்டுவர முதல்முறையாக வைத்தியர்கள் ட்ரோன்னை பயன்படுத்தியிருந்தனர்.
இதற்கு தகுந்தவாறு வைத்தியாலையுடன் சேர்ந்து மேரிலாந்து பல்கலைக்கழக வைத்தியர்கள் திட்டமிட்டனர்.
சிறுநீரகத்தைக் கொண்டு செல்வதற்கு முன்பாக இதே ட்ரோனை பயன்படுத்தி இரத்தம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பி வைத்து சோதனை மேற்கொண்டனர்.
அதன்படி ட்ரோன் மேற்கு பால்டிமோர் சிட்டியில் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு இடையேயான சில மைல்களை வெற்றிகரமாகக் கடந்து சிறுநீரக உறுப்பை கொண்டு சேர்த்தது.
” உடல் உறுப்புகளை இப்போது கொண்டு செல்லும் முறையை மாற்றியமைப்பதற்கு இது ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது. இந்த முறை அமுலுக்கு வந்தால், நிறைய மக்கள் பயன் பெறுவார்கள். அமுலுக்கு வருவதற்கு இன்னும் பல காலங்கள் ஆகலாம். ஆனால், அதற்கு இதுதான் முதல்படி ஆகும் " என அந்தப் பெண்மணிக்கு சிகிச்சை அளித்த வைத்தியர் ஜோசப் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM