மேல் மாகாண பாதுகாப்பு படை கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே நியமிப்பு

Published By: J.G.Stephan

30 Apr, 2019 | 02:13 PM
image

மேல் மாகாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் இயங்கும் இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ் பிரிவுகள் யாவும் கொழும்பு கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. செயற்பாட்டு நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு சகல பிரிவுகளையும் கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகத்தின் கீழ் கொண்டுவந்ததாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே புதிய கட்டளை தலைமையகத்தின் தலைவராக கடமையாற்றுவார். 

மேலும், கடற்படையைச் சேர்ந்த றியர் அட்மிரல் டபிள்யு.எஸ்.எஸ்.பெரேரா, விமானப் படையைச் சேர்ந்த எயார்வைஸ் மார்ஷல் டபிள்யு.எல்.ஆர்.பி.றொட்றிக்கோ, பொலிஸ் அத்தியட்சகர் அனில் பிரியந்த ஆகியோர் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக செயற்படுவார்கள்.

கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகமானது பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியின் கீழ் இயங்கும் என இராணுவத் தளபதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01