தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டுவந்த லொறி ஒன்று பொலன்னறுவை சுங்காவில பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த லொறியுடன் 3 சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
EP - PX 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்களை அடுத்து சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டதுடன், அது தொடர்பிலான தகவல்களை அறியத்தருமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்த நிலையில்,நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகளக்கு அமைய தேடப்பட்டு வந்த ஐந்து வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒரு லொறி இன்று பொலனறுவை பகுதியில் வைத்து பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்,சந்தேகத்திற்கு இடமான மூன்று மோட்டார் சைக்கிள்கள் இதுவரையில் கைப்பற்றப்படவில்லையென்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM