வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் அநாதரவாக கிடந்த பயண பொதியினால் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு வாகன போக்குவரத்துக்களும் சுமார் அரை மணிநேரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.
பஸ் தரிப்பிடத்தில் பாரிய பயண பொதியொன்று உரிமை கோரப்படாத நிலையில் நீண்ட நேரமாக காணப்பட்டமையால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட இராணுவத்தினர் ஏ9 வீதியில் போக்குவரத்தை தடை செய்ததோடு குறித்த பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தி பொதியை பரிசோதனை செய்தனர்.
இதன் போது குறித்த பயண பொதியினுள் ஆபத்தான பொருட்கள் ஏதும் இல்லை என தெரியவந்த நிலையில் ஓமந்தை பகுதியில் இருந்து வருகைதந்த இளைஞன் ஒருவன் குறித்த பொதி தன்னுடையது எனவும் பயணத்திற்காக காத்திருந்த போது பஸ்ஸை தவறவிட்டமையினால் தனது குடும்பத்தினரை பஸ்ஸில் ஏற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்ற சமயம் குறித்த பொதியை இங்கு வைத்து சென்றதாக இராணுவத்தினரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு அவரது மனைவியும் மகளும் வருகைதந்த நிலையில் அவர்கள் தொடர்பாக இராணுவத்தினர் தகவல்களை பெற்றதன் பின்னர் அங்கிருந்து செல்ல அனுமதித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM