ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் கள நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் என்கிற சாதனையும், பெருமையையும் அவுஸ்திரேலியாவின் கிளார் போலோசக் பெற்றுள்ளார்.
உலக கிரிக்கெட் லீக் ட்விஷன் 2 அளவிலான ஓமன் - நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் கள நடுவராக பணியாற்றி வருகிறார் போலோசக்.
இதன் மூலம் ஆடவர் சர்வதேச கிரிக்கெட்டில் கள நடுவராகப் பணியாற்றிய முதல் பெண் என்கிற பெருமைக்கும் சாதனைக்கும் ஆளாகியுள்ளார்.
இத்தனைக்கும் அவர் ஒரு வீராங்கனையாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காதவர். எனினும் நடுவர் பணியில் திறமையாகப் பணியாற்றி இன்று சாதனை நிகழ்த்தும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
2017இல் ஏற்கனவே அவுஸ்திரேலிய ஆடவர் உள்ளூர் போட்டி ஒன்றிலும் அவர் நடுவராகப் பணியாற்றியுள்ளார். 15 மகளிர் ஒருநாள் ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றிய போலோசக், 2017 ஒருநாள் உலகக் கிண்ணம், 2018 இருபதுக்கு 20 உலகக்கிண்ணம் ஆகிய முக்கியமான போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றிய பெருமை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM