12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 48 ஆவது லீக் போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத் மற்றும் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.
அதன்படி இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு ஐதராபாத்திலுள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இவ்விரு அணிகளும் தலா 5 வெற்றி, 6 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.
எனினும் எஞ்சிய போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அதனால் இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா–சாவா? மோதல் தான்.
ஐதராபாத் அணிக்கு உள்ளூரில் நடக்கும் கடைசி லீக் போட்டி இதுவாகும். இந்த மைதானத்தில் 6 ஆட்டங்களில் 4 இல் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணிக்கு சொந்த ஊர் ரசிகர்களின் முன்னிலையில் ஆடுவது கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
ஏற்கனவே பஞ்சாப்புக்கு எதிராக அவர்களது கோட்டையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஐதராபாத் அணி, இன்றைய தினம் அதற்கு பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
பஞ்சாப் அணியை பொறுத்தவரை கிறிஸ் கெய்ல் மற்றும் லோகேஷ் ராகுல் தவிர ஏனைய வீரர்கள் துடுப்பாட்டத்தில் சிறப்பாக இல்லாதது அந்த அணிக்கு பெரும் பலவீனமாக காணப்படுகிறது.எனினும் பந்து வீச்சில் அஸ்வின், முருகன் அஸ்வின் போன்றவர்களின் பந்துகள் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கின்றது.
கடந்த 2 ஆட்டங்களில் போராடி தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அணி, இன்றைய போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி பிளேஒப் சுற்றுக்குள் நுழைய விடாபிடியாக போராட வேண்டிய கடப்பாடில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM