தமிழகத்தின் ஈரோடு அருகே, விஷ ஜந்துகளின் களிமண் பொம்மைகளை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாடு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் காவிலி பாளையத்தை அடுத்த அலங்காரிபாளையத்தில், சுமார் 300 ஆண்டு பழமையான அய்யன் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விசேஷ பூஜைகள் நடக்கும். இதன்போது, விஷ ஜந்துகளின் உருவ களிமண் பொம்மைகளை உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில், சித்திரை மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையான நேற்று (28ம் திகதி), அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர். அவர்கள், கோயிலுக்குச் செல்லும் முன்பு, கோயில் வளாகத்தில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் பாம்பு, தேள், பூரான், பல்லி, ஓணான் போன்ற விஷ ஜந்துகளின் களிமண் பொம்மைகளை வாங்கினர்.
இந்த பொம்மைகளை, அய்யன் மற்றும் கருப்பராயன், தன்னாசியப்பன், பாம்பாட்டி தெய்வங்கள் முன் வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்ட பின்னர் அந்த பொம்மைகளை கல்லில் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, மூலவர் அய்யன் சுவாமிக்கு அலங்காரம் மற்றும் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த வினோத வழிபாடு குறித்து பக்தர்கள் கூறுகையில், “இவ்வாறு செய்வதால், வீடு மற்றும் தோட்டப் பகுதிகளில் விஷ ஜந்துகள் நடமாட்டம் இருக்காது; மனிதர்களையும் விஷ ஜந்துகள் தீண்டாது” என தெரிவித்தனர். இந்த விழாவில், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM