இந்தோனேசியா நாட்டில் செலவினங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி பதவி மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு முதல்முறையாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்திய பணிச்சுமையால் 272 அரசு பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இந்தோனேசியா நாட்டில் தேர்தலுக்காக செய்யப்படும் செலவினங்களை குறைக்கும் நோக்கத்தில் அந்நாட்டின் ஜனாதிபதி பதவி, பாராளுமன்றம் மாநில சட்டமன்றங்களுக்கு கடந்த 17 ஆம் திகதியன்று ஒரேநாளில் தேர்தல் நடத்தப்பட்டது
சுமார் 26 கோடி மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில் முதல்முறையாக 3 தேர்தல்களும் ஒருசேர நடத்தப்பட்டன. வாக்களிக்கும் உரிமை கொண்ட 19.3 கோடி மக்களில் 80 சதவீதம் பேர் இந்த தேர்தல்களில் வாக்களித்தனர்.
ஆனால். இந்தோனேசியாவின் கிழக்கு எல்லையில் இருந்து மேற்கு எல்லை வரையிலான சுமார் 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 8 இலட்சம் வாக்குச்சவடிகளை அமைத்து, வாக்குச்சீட்டு முறையில் போடப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகளை மேற்பார்வையிடுவது அவ்வளவு எளிதான பணியாக அமைந்து விடவில்லை.
இந்நிலையில், தேர்தல்கள் தொடர்புபட்ட கூடுதல் பணிச்சுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்றிரவு வரை 273 பேர் உயிரிழந்ததாகவும் 1878 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசியா தேர்தல் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஓராண்டு சம்பளத்துக்கு நிகரான பணத்தை இழப்பீடாக அளிக்க தேர்தல் கமிஷன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இன்னும் சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தல்களின் முடிவு மே மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM