தெமட்டகொடை, வணாத்தவில்லு, நிந்தவூர் பகுதிகளிலிருந்து பல பொருட்களுடன் வவுணதீவு பொலிஸார் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாகிகளும் மீட்பு

Published By: J.G.Stephan

28 Apr, 2019 | 01:45 PM
image

கடந்த 21 ஆம்  திகதி உயிர்ப்பு ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதலில், முக்கிய தற்கொலைதாரிகளின் குடியிருப்பான வெடிப்பு ஏற்பட்ட கொழும்பு, தெமட்டகொடை வீட்டிலிருந்து, முக்கிய சில பொருட்களும் மற்றும் வணாத்தவில்லு பகுதியிலிருந்து சிலபொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

தற்கொலைத் தாக்குதலில், ஈடுபட்ட இரு சகோதரர்களுடையதும், பிரபல வர்த்தகருடையதுமான தெமட்டகொடை வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸாருக்கு பல பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த வீட்டிலிருந்து, சுமார் 30 மில்லியன் ரூபா, 15 மில்லியன் ரூபா பெறுமதியான  3 இரத்தினக்கற்களும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன்  15 மில்லியன் ரூபா பணமும் 5 இலட்சம்  ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள், நகைகள் என்பனவற்றை பொலிஸார் குறித்த தெமட்டகொட வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொலைக்காக பயன்படுத்தியிருக்கலாமென சந்தேகிக்கப்படும், துப்பாக்கியொன்றை நிந்தவூரில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீடொன்றிலிருந்தும், மற்றொரு துப்பாக்கியை வணாத்தவில்லு பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ரி-56 ரக துப்பாக்கியொன்றும், 6 ரிவோல் துப்பாக்கிகளும் மற்றும் பெருமளவு வெடிபொருட்களும் குறித்த வணாத்தவில்லு காணியிலிருந்து புதைக்கப்பட்டிருந்த நிலையில்  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பல ஆதாரங்களைப்பெற்ற பொலிஸார், கடந்த ஞாயிற்க்கிழமை இடம்பெற்ற தொடர் தற்கொலைத்தாக்குதலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51