அடுத்த ஆண்டில் பாடசாலை சீருடைகளை மீண்டும் பழைய முறையின் கீழ் விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரி க்கைவிடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கம் கடிதமொன்றையும் ஜனாதி பதிக்கு அனுப்பிவைத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகையில்
தேசிய அரசாங்கத்தின் கீழ் இவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட வவுச்சர் முறையின் மூலம் சீருடையை பெறும் முறைமையினால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
விலைமனு கோரல் மற்றும் தரமற்ற சீருடைத் துணி விநியோகம் என்பவற்றில் நிலவிய குறைபாடுகள் உள்ளிட்ட விடயங்களை மட்டும் கருத்தில் கொண்டே கல்வி அமைச்சு இப்புதிய முறையினை அறிமுகப்படுத்தியிருந்தது. இருந்த போதிலும் புதிய முறையில் எவ்விதமான வினைத்திறனும் காணப்படவில்லை.
இவ்வாறான நிலையில் 2017 ஆம் ஆண்டில் வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதற்கு எமது சங்கம் தீர்மானித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM