ரி. ரி. வி. தினகரனின் ஆதரவாளர்களாக உள்ள மூன்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தால் தேர்தலைச் சந்திப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
“ரி. ரி. வி. தினகரன் ஆதரவாளராக உள்ள மூன்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தாலும், நாங்கள் நீதிமன்றம் செல்ல மாட்டோம் . தேர்தலை சந்திப்போம். எங்களது ஸ்லீப்பர் செல்கள் அ.தி.மு.க.வில் இன்னும் உள்ளனர். அவர்கள் அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள்.” என்றார்.
முன்னதாக கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பிரபு, விருத்தாச்சலம் தொகுதிஅ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகிய மூவரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் ரி. ரி. வி. தினகரனுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும், கட்சியை பாதிக்கும் வகையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சபாநாயகர் தனபாலிடம் அரசு கொறடா ராஜேந்திரன் மனு ஒன்றை அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM