பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி உறுதியளிப்பு.

Published By: Vishnu

26 Apr, 2019 | 08:41 PM
image

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கைக்கு முழுமையாக உதவுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலிஹ் தொலைபேசி மூலம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இச்சந்தர்ப்பத்தில் சகோதர நாடு என்ற வகையில் மாலைத்தீவு இலங்கையுடன் கைகோர்த்திருப்பதாகவும் இப்ராஹிம் முஹமட் சொலிஹ் தெரிவித்தார்.

இந்த துன்பியல் சம்பவத்தில் பலியான அனைவரினதும் குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த மாலைத்தீவு ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு கவலை தெரிவித்தமை தொடர்பில் மாலைத்தீவு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன, இந்த நாசகார பயங்கரவாத இயக்கத்தை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு இலங்கை பாதுகாப்பு துறையின் பங்களிப்புடன் விரைவில் மேற்கொள்ள முடியுமென்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47