அவசரகால ஒழுங்கு சட்ட விதிகள் அமுலுக்கு வந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் பயங்கரவாதத்தை முடக்குவதற்காக நாடு முழுவதும் 10,000 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் தற்போது வெளிவரும் பொய்யான வதந்திகள் தொடர்பாக விழிப்புணரவுடன் பொது மக்கள் இருக்க வேண்டும் எனவும் சந்தேக நபர்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கங்கங்களான 011-2434251, 011-4055105, 011-4055106, 0766911640 குண்டு செயலிழப்பு பிரிவு 011-2433335 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடற்படையினரால் 11 சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி தொழில் ஈடுபடும் மீனவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை மற்றும் படகுகளுக்கான ஆவன உத்தரவு பத்திரங்களுடன் செல்லவேண்டும் என கடற்படை பேச்சாளரான லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.
அத்துடன் விமானப்படை பேச்சாளரான குரூப் கெப்டன் ஹுகான் செனவிரத்ன, பாதுகாப்பு நடவடிக்கை பணிகளில் விமானப்படையினனர் 1000 பேர் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபட்டுள்ளதுடன் சர்வதேச விமான நிலையங்களான கொழும்பு, மாத்தளை, இரத்மலானை மற்றும் களுத்தறை போன்ற பிரதேசங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM