புதிய பிரதம நீதியரசராக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு சபை இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதன்பொது பிரதம நீதியரசர் நியமனம் மற்றும் புதிய கணக்காய்வு நாயகம் ஆகியோர் நியமனம் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது சட்ட மா அதிபர் ஜயந்த ஜெயசூரியவை புதிய பிரதம நீதியரசராக நியமிக்க அரசியல் அமைப்பு சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முனனர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நளின் பெரேரா அண்மையில் ஓய்வு பெற்றுள்ளதையடுத்து அந்த வெற்றிடத்துக்கு புதிய நீதியரசர் ஒருவரை நியமிக்க வேண்டியிருந்தது.
எனினும் கடந்த புதுவருட தினத்தில் இருந்து 22 ஆம் திகதி வரையில் நீதிமன்ற விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இம்மாதம் 28 ஆம் திகதி புதிய நீதியரசர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளை அடுத்து நேற்றைய தினமே புதிய நீதியரசராக ஜயந்த ஜயசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதேபோல் புதிய கணக்காளர் நாயகமாக இதற்கு முன்னர் மேலதிக கணக்காளராக செயற்பட்ட சூலா விக்கிரமரத்னவை நியமிக்க அரசியலமைப்பு சபையில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நியமனங்கள் குறித்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM