பொலிஸ் மா அதிபர் பதவி விலகுவார் என நம்புகிறேன் - ஜனாதிபதி

Published By: Vishnu

26 Apr, 2019 | 10:49 AM
image

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியை இன்றைய தினம் இராஜினாமா செய்வார் என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் ஊடக ஆசியர்களுடனான சந்திப்பிப்னபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் தமது கடமைகளை உரியவாறு மேற்கொள்ளாதமையினால் இன்றைய தினம் பொலிஸ் மா அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்வார் என நான் நம்புகிறேன் எனவும் இதன்போது அவர்  மேலும் தெரிவித்தார்.

இதேநேரம் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ நேற்றைய தினம் தனது பதிவியை இராஜினாமா செய்த நிலையில் அப் பதவிக்கான புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்