பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தால் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் மாலை மற்றும் இரவு நேர ரயில்கள் இடம்பெறாது எனவும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படாத தினங்களில் மாலை மற்றும் இரவு நேர ரயில் சேவையில் ஈடுபடும் எனவும் மட்டக்களப்பு ரயில்வே நிலையத்தின் பிரதான ரயில் நிலைய அதிபர் சின்னத்தம்பி சுவேதகுமாரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் ரயில் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கும் காலை மற்றும் மாலை,இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் மூன்று ரயில்களில் காலையில் சேவையில் ஈடுபடும் ஒரு ரயில் மாத்திரம் தற்போது சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை காலை 11.00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்திக்கு ஒரு ரயில் சேவையில் ஈடுபடுவதுடன்,இரவு நேர எரிபொருள் ரயில் இன்னும் சேவையில் ஈடுபடவில்லை.
அத்தோடு மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களிலிருந்து கொழும்பு நோக்கி இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும்,தனியார் பஸ்களும் காலை நேரங்களில் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM