(எம்.மனோசித்ரா)
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தொடர்குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து அனைவரதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு துறையினரால் முன்னெடுக்கப்படும சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைவதற்காக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.
இந்த தொடர் குண்டு தாக்குதல்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளோம்.
பிரயாணிகள் தமது பயணப்பைகளை பஸ்ஸில் காணப்படும் ரெக்கில் வைப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.
பைகளை உரியவர்களே தம்மிடம் வைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இதற்கான சகல பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம்.
பயங்கரவாதத்தை தோல்வியடைச் செய்வதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் அழைப்பு விடுப்பதாகவும் அதன் செயலாளர் கெமுனு பரனவிதாரண தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM