இலங்கையின் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துவேறுபாடுகளை கைவிட்டுவிட்டு முக்கிய பாதுகாப்பு பொருளாதார பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புளும்பேர்க் சர்வதேச ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் தலைவர்கள் அரசியல் பேதங்களை கைவிட்டுவிட்டு அரசியல்நிலவரத்திற்கு தீர்வை காண்பதற்கு முன்வரவேண்டும் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நண்பர்கள் ஏற்கனவே அரசியல் தலைவர்கள் அரசியலை கைவிட்டு நாட்டின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ள தூதுவர் குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு கோருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்
அரசியலை அடிப்படையாக கொண்ட நிலைப்பாடுகள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை காணமுடிகின்றது என தெரிவித்துள்ள தூதுவர் இந்த தருணத்தை பயன்படுத்தி அரசியல் ரீதியில் இலாபமடைவதற்கு பலர் முயல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்
குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் குறித்து ஆழமாக சிந்திக்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன் என அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்
நாட்டிற்கான விளைவுகள் குறி;த்து ஆழமாக சிந்திக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அதிநவீன உத்திகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளில் அமெரிக்காவின் எவ்பிஐ இலங்கை அதிகாரிகளிற்கு உதவி வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருட இறுதியில் இலங்கையில் உருவாகி அரசமைப்பு நெருக்கடி முதலீட்டாளர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் ஒரு கணம் சிந்திக்கவைத்தது எனவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
புலனாய்வு விடயத்தில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டதை அரசாங்கமே ஏற்றுக்கொள்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதுவர் இந்த பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM