முல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் மாவட்ட பொதுவைத்தியசாலை பஸ் நிலையம் போன்ற இடங்களில் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுக்கப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
மேலும் குறித்த அரச திணைக்களங்கள் வைத்தியசாலைகளுக்கு வரும் மக்களின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கபடுகின்றனர் .
திடீரென இராணுவம் குவிக்கப்பட்டு சோதனைகள் இடம்பெறுவதனால் மக்கள் மத்தியில் போருக்கு முந்திய காலங்களில் ஏற்பட்டத்தை போன்று அச்சமானதொரு மனநிலை காணப்படுகின்றது .
மேலும் இன்றையதினமும் முல்லைத்தீவில் உள்ள கடைகள் அனைத்தும் மூடபட்டு வெள்ளை மற்றும் கறுப்பு கொடிகள் கட்டபட்டு துக்கம் அனுஸ்டிக்கப்பட்டது .இதனால் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன .
நேற்றும் இன்றும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவில் 5 முஸ்லீம் நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM