பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 42 ஆவது லீக் போட்டி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமானது.
அதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 202 ஓட்டங்களை குவித்தது.
203 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 17 ஓட்த்தினால் தோல்வியை தழுவியது.
பஞ்சாப் அணி சார்பில் ராகுல் 42 ஓட்டத்துடனும், கிறிஸ் கெய்ல் 23 ஓட்டத்துடனும், அகர்வால் 35 ஓட்டத்துடனும், மில்லிர் 24 ஓட்டத்துடனும், அதிரடி காட்டிய நிகோலஷ் பூரன் 28 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக 46 ஓட்டத்துடனும், அஷ்வின் 6 ஓட்டத்துடனும், வில்ஜென் டக்கவுட் முறையிலும் ஆட்டமிழக்க, ஆடுகளத்தில் முருகன் அஷ்வின் ஒரு ஓட்டத்துடனும், மண்டீப் சிங் 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், நவ்டிப் சைனி 2 விக்கெட்டுக்களையும், ஸ்டோனிஸ் மற்றும் மொய்ன் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM