(இராஜதுரை ஹஷான்)
தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்திய கோழைகள் எவ்விதமான மனிதாபிமானம் அற்றவர்கள். எந்தவொரு போதனைக்கும், சமய நம்பிக்கைக்கும் அல்லது நற்சிந்தனைக்கும் அவர்கள் மதிப்பளிக்காதவர்கள். எமது நாட்டில் பேரழிவு, அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களது நோக்கமாகும். எந்த வடிவிலான தீவிரவாதத்திற்கும் எமது தாய்நாட்டில் இடம் கிடையாது. என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விசேட அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்கள் மிலேட்சதனமானது. பல நூற்றுக்கணக்கான அப்பாவி இலங்கை மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரஜைகள், அதிலும் பெரும்பான்மையாக தமது குடும்பத்தினர் மற்றும் உறவுகளுடன் பிரார்த்தனையிலும், கொண்டாட்டத்திலும் ஈடுபட்டவர்களை இலக்கு வைத்து இடம்பெற்ற மிலேச்சத்தனமான மற்றும் கோழைத்தனமான இப்பயங்கரவாத செயலை நான் மிகவும் வன்மையாகக் கண்டிகின்றேன்.
இக்குற்றங்களை மேற்கொண்ட கோழைகள் எவ்விதமான மனிதாபிமானமும் அற்றவர்கள். எந்தவொரு போதனைக்கும், சமய நம்பிக்கைக்கும் அல்லது நற்சிந்தனைக்கும் அவர்கள் மதிப்பளிக்காதவர்கள். எமது நாட்டில் பேரழிவு, அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களது நோக்கமாகும்.
எவ்விதமான அச்சங்களுமின்றி, கௌரவமாக வாழும் உரிமையை அனைத்து இலங்கை மக்களும் கொண்டுள்ளதுடன், தங்களதும், தங்களுடைய அன்பிற்குரியவர்களினதும் சிறந்த எதிர்காலத்தை முன்னெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. துயரம், அதிர்ச்சி மற்றும் அச்ச உணர்வு எம்மத்தியில் நிலவும் இத்தருணத்தில், தேசிய நலனைப் பேணுவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM