(ஆர்.விதுஷா)
வெலிகடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் , 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகடை - ராஜகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் ,விபச்சார விடுதி இயங்கி வருவதாக வெலிகடை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புதுக்கடை இல 04 நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் நேற்று இரவு 10.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் 25 வயதிற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய மஹவ , பரசன்கஸ்வாவ , மாதம்பே , பரனடுவெல , பதவிய ,நாவலப்பிட்டிய , வீரமுகெதர ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
அத்துடன், சந்தேக நபர்களை புதுக்கடை இல 04 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் இன்றய தினம் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM