நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டத்தின் வாழமலை பிரிவில் வசிக்கும் 32 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணமூர்த்தி தயானந்தன் நேற்று கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரது சடலத்தை பொரலை வைத்தியசாலையின் சவசாலையில் அவரது தந்தை அடையாளம் காட்டியதன் பின்னர் சடலத்தை பொறுப்பேற்றுள்ளனர்.
இவர் கல்கிஸ்சை பகுதியில் கட்டிட நிர்மான பகுதியில் பணி புரிந்து வந்துள்ளார் எனவும் சம்பவ தினத்தன்று தேவாலயத்திற்கு வழிபட சென்ற போது மரணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பிலிருந்து அவரது இல்லத்திற்கு இன்று பகல் 2:30 மணியளவில் சடலத்தை கொண்டுவந்த பின்னர் நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து மற்றும் கிராம அலுவலர் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலும் இறுதி கிரியைகள் நாளை மறுநாள் (24ஆம் திகதியன்று) நடைபெற உள்ளதாக குறித்த இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM