ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்த நபர்ஒருவரை கொள்ளுபிட்டியில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை 11 மணியளவில் கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 06 கடவுச்சீட்டுக்கள், போலியாக செய்யப்பட்ட 06 ஜப்பான் விசாக்கள், 02 வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் 02 மடிக்கணினி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
வத்தளை- ஹுனுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம் ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்ததாக சந்தேகநபருக்கு எதிராக குருணாகல் விஷேட குற்ற விசாரணைப் பிரிவில் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் குருணாகல் விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM