நடிகர் பிரகாஷ்ராஜ் படித்த பாடசாலையிலே தனது வாக்கை பதிவு செய்தமை தொடர்பாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பல்வேறு பிரபலங்கள் தமது வாக்குகளை பதிவு செய்திருந்தார்கள்.
அரசியலையும் தமிழ் சினிமாவையும் பிரிக்க முடியாது. ஏறக்குறைய கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று மறைந்த மூன்று முதல்வர்களை தமிழ்நாட்டுக்கு கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா.
மேலும் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், ராஜ்ய சபா உறுப்பினர் எனப் பெரிய பட்டியல் இருக்கிறது. அப்படி அரசியலை புரட்டி போடும் சினிமாவின் நாயகர்கள் பல மணிநேரம் மக்களோடு மக்களாக நின்று வாக்குபதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேச்சையாக மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தான் படித்த பாடசாலையிலே தனது வாக்கைச் செலுத்தியிருக்கிறார்.
''நான் எனது பாடசாலையில் 41 ஆண்டுகளுக்கு முன்பு எந்த வகுப்பறையில் உட்கார்ந்திருந்தேனோ அதே இடத்தில் இன்று எனது வாக்கைச் செலுத்தினேன். மறக்க முடியாத நினைவுகளும், புதுப்பயணமும்'' என பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
இதனை பார்த்த ஆதரவாளர்களும், ரசிகர்களும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். 41 ஆண்டுகளுக்கு பின்னர் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM