தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் நிலைப்பாடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் அரசியல் நிலைப்பாடும் ஒன்றாக இருக்குமானால் அது தமிழ் முஸ்லிம் சமூகத்தை வெற்றியடையச் செய்யும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை நடத்திய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான செயலமர்வில் கலந்து கொண்டுரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் தொடர்ந்துரையாற்றுகையில், அதிகாரங்கள் அர்த்தமுள்ள விதத்திலே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்கின்ற அடிப்படை விடயத்தில் நாங்கள் ஒன்றாக நிற்கின்றோம்.
உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சட்டத்தில் கூட நாங்கள் எடுக்கவுள்ள நிலைப்பாடு ஒன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
நாங்கள் எடுக்கும் நிலைப்பாடும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும் நிலைப்பாடும் ஒன்றாக இருந்தால்தான் தமிழ் சமூகம் வெற்றி கொள்ளும். முஸ்லிம் சமூகமும் வெற்றிகொள்ளும்.
இது எவ்வளவு பெரிய சவாலக இருந்தாலும் நாங்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM