தவறுதலாக கட்சி மாறி வாக்களித்ததால் விரலை துண்டித்துக் கொண்ட இளைஞன்

19 Apr, 2019 | 02:01 PM
image

இந்தியாவில் தான் வாக்களிக்க நினைத்த கட்சி இல்லாமல் வேறு கட்சிக்குத் தவறுதலாக வாக்களித்ததால் இளைஞர் ஒருவர் தன் விரலைத் துண்டித்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவில் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதையொட்டி தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. 

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கிராமத்தைச் சேர்ந்த  25 வயதுடைய இளைஞர், தான் நினைத்த கட்சி இல்லாமல் தவறுதலாக வேறு கட்சிக்கு மாற்றி வாக்களித்துள்ளார். அதற்குத் தண்டனை அளிக்கும் விதமாக கூரிய ஆயுதத்தால் தன் விரலைத் தானே துண்டித்துள்ளார். இதன் பின்னர் தவறாக வாக்களித்ததற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ  மக்கள் மத்தியில் அதிகமாக வைரல் ஆகியுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right