பண்டிகைக் காலத்தின் பின்னர் கொழும்பு திரும்பும் பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து அமைச்சு கூட்டு திட்டமொன்றை அறிமுகம் செய்யவுள்ளது.
அதன்படி, இலங்கை போக்குவரத்துச் சபை, ரயில்வே திணைக்களம், பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவை இணைந்து பயணிகளுக்கு மிகச் சிறந்த சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டு வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை அமுலில் இருக்குமெனவும், இதில், இலங்கை போக்குவரத்துச் சபையைச் சேர்ந்த 1,350 பஸ் வண்டிகள் தூர இடங்களில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
மேலும், சுமார் 3 ஆயிரம் தனியார் பஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. அத்தோடு, எதிர்வரும் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் 11 விசேட ரயில் சேவைகள் நடத்தப்பட உள்ளன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வழியாக கொழும்பு வரும் வாகனங்களை அத்துருகிரிய, கஹதுடுவ முதலான இடம்மாறல் நிலையங்களில் இருந்து வெளியேறச் செய்து, கொழும்பு நோக்கிய பயணத்தை தொடரச் செய்வது என தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM