(ஆர்.யசி)
ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பலரது கருத்துக்கள் உள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பல கருத்துக்கள் உள்ளன ஆனால் குழப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரதான நபர்கள் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் நகர்வுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
இப்போது கட்சிக்குள் குழப்பங்கள் நிலவுவதாக கூறும் கதைகள் அனைத்துமே பொய்யானவை. கட்சிக்குள் பல கருத்துக்கள் உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியாக சிலர் தமது நிலைப்பாட்டினை கூறுகின்றனர்.
ஐக்கிய தேசிய முன்னணியாக நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் இடையில் பல கருத்துக்கள் நிலவுகின்றது. ஆகவே இவை அனைத்தையும் தாண்டி பொதுவான ஒரு நிலைப்பாட்டினை எம்மால் எட்ட முடியும். இப்போதும் அவ்வாறான நிலைப்பாடு ஒன்றினை நாம் எட்டியுள்ளோம்.
எவ்வாறு இருப்பினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெரும். இதில் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவில் வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவில் எம்மால் ஆட்சியை அமைக்க முடியும்.
சகல மகளுக்குமான பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை நாம் நல்லாட்சியில் முன்னெடுத்து வருகின்றோம். அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து ஆரோக்கியமான திசைக்கு நாட்டினை கொண்டு செல்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM