தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த இரண்டு பிரபல தெலுங்கு நடிகைகள் பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் பொலிவூட் திரையுலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகைகள் அனுஷா ரெட்டி, பார்கவி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பு முடிந்ததும் கார் ஒன்றில் ஐதராபாத்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது திடீரென எதிர்பாராத விதமாக கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் நடிகை பார்கவி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகை அனுஷா ரெட்டி சிகிச்சையின் பலனின்றி மரணமடைந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM