பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளை கீழே இறக்கி சரமாரியாக சுட்டுக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், பயங்கரவாத தாக்குதல் மற்றும் வன்முறைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கும்பல்கள் அடிக்கடி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.
இந்நிலையில், ராணுவ சீருடையில் துப்பாக்கி ஏந்தி வந்த கும்பல், கராச்சி-கவாதர் வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்த பஸ்களை நிறுத்தி சோதனையிட்டது.
ஆர்மரா பகுதியில் ஒரு பஸ்ஸை நிறுத்தி, குறித்த பஸ்ஸில் இருந்த பயணிகளின் அடையாள அட்டைகளை சோதனை செய்தனர். பின்னர் 16 பேரை கீழே இறக்கி தனியாக அழைத்துச் சென்று, அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டமையால் குறித்த சம்பவத்தில 14 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.
2 பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் அங்கிருந்து தப்பி ஓடி, அருகில் உள்ள சோதனைச் சாவடிக்கு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு ஏராளமான பொலிஸார் விரைந்தனர். அதற்குள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள், அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து மீட்கப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM