உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பெரும் பாதிப்பை விளைவிக்கும் ; மக்கள் போராட்ட மத்திய நிலையம்

Published By: Digital Desk 4

18 Apr, 2019 | 04:21 PM
image

( செ. தேன்மொழி )

பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் உள்ள பெருவாரியான ஏற்பாடுகள் மக்களின் ஜனநாயக உரிமைக்கும், குடியியல் சுதந்திரங்களுக்குக் பெரும் பாதிப்பை விளைவிக்க கூடியன என மக்கள் போராட்ட மத்திய நிலையம் கூறியுள்ளது.

அந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும் பட்சத்தில் அதை தோற்கடிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றது.

இன்று வியாழக்கிழமை இராஜகிரியவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் முன்னிலை சோசலிச கட்சியின் முக்கியஸ்தர் புபுது ஜயகொட ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் போது கூறியதாவது,

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கவேண்டும் அதற்கு பதிலாக அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தையும் நீக்க வேண்டும் என்பதே எமது கருத்து. இந்த சட்டமூலத்தை எதிர்த்து நாங்கள் பல போராட்டங்களை மேற்கொண்டோம் . ஆனால் சட்ட மூலத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

 இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் அதனை எதிர்த்து வாக்களிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

நாங்கள் இந்த சட்ட மூலம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம். மேலும் எதிர்கட்சிகள் இந்த சட்டமூலத்திற்கு எதிரான அபிப்ராயத்தையே கொண்டிருக்கின்றன. என்பதும் குறிப்பிடத்தக்கது.

 ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினரும் இந்த சட்மூலத்திற்கு எதிரான கருத்துக்களையே கொண்டிருக்கின்றது. இவர்களுடான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஜக்கிய தேசிய கட்சியினருடனும் இது தொடர்பில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29