கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு பூசாரி கையால் தாலிக் கட்டிக்கொண்டு ஆடிபாடி மகிழ்ந்து பின்னர் திருநங்கைகள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து ஒப்பாரிவைத்து அழுந்து கொண்டு வீடுதிரும்புவது இந்த விழாவின் பாரம்பரியமாகும்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த இரண்டாம் திகதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை திருநங்கைகள் தாலி கட்டும்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம், மும்பை, கல்கத்தா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
திருநங்கைகள் புதுப்பெண்கள் போல அலங்கரித்து, பின்னர் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர். கூத்தாண்டவரை கணவராக நினைத்து அவரின் அருமை பெருமைகளை குறித்து இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தொடங்கி வைத்தார். தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக 11 மணியளவில் பந்தலடி வந்தது. பின்னர் அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து திருநங்கைகள் பூசாரியின் கையால் தாலி அறுத்து எறிந்தனர். பூக்களைப் பிய்த்து வீசி, நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்தனர். ஓப்பாரி வைத்து அழுதனர். பின்னர் அருகில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM